பக்கம் எண் :

நட்பியல்178கலைஞர் உரை

886.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.
 

ஒன்றி இருந்தவர்களிடையே  உட்பகை தோன்றி விடுமானால், அதனால்
ஏற்படும்  அழிவைத்  தடுப்பது  என்பது  எந்தக்  காலத்திலும்  அரிதான
செயலாகும்.
 

887.

செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி.
 

செப்பு  எனப்படும்  சிமிழில்  அதன்  மூடி  பொருந்தியிருப்பது போல
வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள்
உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.
 

888.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு

துட்பகை உற்ற குடி.
 

அரத்தினால்   தேய்க்கப்படும்   இரும்பின்   வடிவமும்   வலிமையும்
குறைவதைப் போல,  உட்பகை உண்டான  குலத்தின் வலிமையும் தேய்ந்து
குறைந்து விடும்.
 

889.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.
 

எள்ளின்   பிளவுபோன்று    சிறிதாக    இருந்தாலும்   உட்பகையால்
பெருங்கேடு விளையும்.
 

890.

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போ டுடனுறைந் தற்று.
 

உள்ளத்தால்  ஒன்றுபடாதவர்கள்  கூடிவாழ்வது  என்பது  ஒரு  சிறிய
குடிலுக்குள் பாம்புடன்  இருப்பது  போன்று  ஒவ்வொரு நொடியும் அச்சம்
தருவதாகும்.