896. | எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் |
| பெரியார்ப் பிழைத்தொழுகு வார். |
|
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது. |
897. | வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் |
| தகைமாண்ட தக்கார் செறின். |
|
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும். |
898. | குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு |
| நின்றன்னார் மாய்வர் நிலத்து. |
|
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள். |
899. | ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து |
| வேந்தனும் வேந்து கெடும். |
|
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். |
900. | இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் |
| சிறந்தமைந்த சீரார் செறின். |
|
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது. |