91. பெண்வழிச்சேறல் |
901. | மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் |
| வேண்டாப் பொருளும் அது. |
|
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள். |
902. | பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் |
| நாணாக நாணுத் தரும். |
|
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும். |
903. | இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் |
| நல்லாருள் நாணுத் தரும். |
|
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். |
904. | மனையாளை யஞ்சும் மறுமையி லாளன் |
| வினையாண்மை வீறெய்த லின்று. |
|
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை. |
905. | இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும் |
| நல்லார்க்கு நல்ல செயல். |
|
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான். |