956. | சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற |
| குலம்பற்றி வாழ்துமென் பார். |
|
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். |
957. | குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் |
| மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. |
|
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும். |
958. | நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் |
| குலத்தின்கண் ஐயப் படும். |
|
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். |
959. | நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் |
| குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். |
|
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம். |
960. | நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் |
| வேண்டுக யார்க்கும் பணிவு. |
|
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும். |