98. பெருமை |
971. | ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் |
| கஃதிறந்து வாழ்தும் எனல். |
|
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும். |
972. | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா |
| செய்தொழில் வேற்றுமை யான். |
|
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். |
973. | மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் |
| கீழல்லார் கீழல் லவர். |
|
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள். |
974. | ஒருமை மகளிரே போலப் பெருமையும் |
| தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. |
|
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும். |
975. | பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் |
| அருமை யுடைய செயல். |
|
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள். |