பக்கம் எண் :

குடியியல்196கலைஞர் உரை

976.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
 

பெரியோரைப்   போற்றி   ஏற்றுக்கொள்ளும்   நோக்கம்,    அறிவிற்
சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
 

977.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.
 

சிறப்பான  நிலையுங்கூட  அதற்குப்  பொருந்தாத   கீழ்  மக்களுக்குக்
கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
 

978.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.
 

பண்புடைய  பெரியோர்   எல்லோரிடமும்  எப்பொழுதும்  பணிவுடன்
பழகுவார்கள்;  பண்பு   இல்லாத  சிறியோர்,  தம்மைத்  தாமே  புகழ்ந்து
கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
 

979.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.
 

ஆணவமின்றி   அடக்கமாக    இருப்பது    பெருமை    எனப்படும்.
ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்.
 

980.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.
 

பிறருடைய  குறைகளை  மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய
குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.