99. சான்றாண்மை |
981. | கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து |
| சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. |
|
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும். |
982. | குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் |
| எந்நலத் துள்ளதூஉ மன்று. |
|
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல. |
983. | அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ |
| டைந்துசால் பூன்றிய தூண். |
|
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும். |
984. | கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை |
| சொல்லா நலத்தது சால்பு. |
|
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு. |
985. | ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் |
| மாற்றாரை மாற்றும் படை. |
|
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும். |