பக்கம் எண் :

22

ஒரு  நுண்கூறு  கிட்டியமை   குறித்து   எண்ணி   எண்ணிப்   பெருமை
யெய்துகிறேன்.   எனக்கு   இவ்வரிய    வாய்ப்பை    நல்கிய  கலைஞர்
அவர்களுக்கு என் நன்றியுணர்வைப் புலப்படுத்திக்  கொள்கிறேன்.  மேலும்
இந் நன்னூலை வெளியிடும் வாய்ப்பைத் திருமகள்  நிலையத்துக்கு அளித்த
கலைஞர் அவர்களின் அன்புள்ளத்திற்குப் பதிப்பகத்தாரின் நன்றியுணர்வை
அவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்வதும் என் கடமையாயிற்று.
 

இந்   நூலை  வாங்கிப்  படித்து   மனத்தில்  பதித்துக் கொள்வதோடு
இயன்றவரை   தேவையான    இடத்திலெல்லாம்   பின்பற்றுமாறும்  நான்
தமிழ்மக்களை அன்புடன் வேண்டுகிறேன்.  இக்  கருத்துகளைத்   தமிழன்,
முரசொலி  ஆகிய   நாளேடுகளில்  எழுதியதற்கும், இப்போது அவற்றைத்
தொகுத்து இந்  நூலாக   வெளியிடுவதற்கும்   கலைஞர்   எதிர்பார்க்கும்
பயன் அதுவேயாகும். அந் நன்றியைத் தமிழகம் செய்ய வேண்டும்  என்பது
எனது வேணவாவாகும்.