996. | பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் |
| மண்புக்கு மாய்வது மன். |
|
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும். |
997. | அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் |
| மக்கட்பண் பில்லா தவர். |
|
அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார். |
998. | நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் |
| பண்பாற்றார் ஆதல் கடை. |
|
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும். |
999. | நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் |
| பகலும்பாற் பட்டன் றிருள். |
|
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும். |
1000. | பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் |
| கலந்தீமை யால்திரிந் தற்று. |
|
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும். |