101. நன்றியில் செல்வம் |
1001. | வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் |
| செத்தான் செயக்கிடந்த தில். |
|
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு. அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? |
1002. | பொருளானாம் எல்லாமென் றீயா திவறும் |
| மருளானாம் மாணாப் பிறப்பு. |
|
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். |
1003. | ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் |
| தோற்றம் நிலக்குப் பொறை. |
|
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும். |
1004. | எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் |
| நச்சப் படா தவன். |
|
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? |
1005. | கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய |
| கோடியுண் டாயினும் இல். |
|
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. |