1006. | ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் |
| றீத லியல்பிலா தான். |
|
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான். |
1007. | அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் |
| பெற்றாள் தமியள்மூத் தற்று. |
|
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது. |
1008. | நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் |
| நச்சு மரம்பழுத் தற்று. |
|
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! |
1009. | அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய |
| ஒண்பொருள் கொள்வார் பிறர். |
|
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர். |
1010. | சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி |
| வறங்கூர்ந் தனைய துடைத்து. |
|
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும். |