102. நாணுடைமை |
1011. | கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் |
| நல்லவர் நாணுப் பிற. |
|
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. |
1012. | ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல |
| நாணுடைமை மாந்தர் சிறப்பு. |
|
உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான். |
1013. | ஊனைக் குறித்த உ யிரெல்லாம் நாணென்னும் |
| நன்மை குறித்தது சால்பு. |
|
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும். |
1014. | அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் |
| பிணியன்றோ பீடு நடை. |
|
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும். |
1015. | பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக் |
| குறைபதி என்னும் உலகு. |
|
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார். |