1016. | நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் |
| பேணலர் மேலா யவர். |
|
பரந்த இந்த உலகில் எந்தப் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள். |
1017. | நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் |
| நாண்துறவார் நாணாள் பவர். |
|
நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள். |
1018. | பிறர்நாணத் தக்கது தானாணா னாயின் |
| அறநாணத் தக்க துடைத்து. |
|
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும். |
1019. | குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் |
| நாணின்மை நின்றக் கடை |
|
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும். |
1020. | நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை |
| நாணால் உயிர்மருட்டி அற்று. |
|
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை. |