1036. | உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் |
| விட்டேமென் பார்க்கும் நிலை. |
|
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும். |
1037. | தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் |
| வேண்டாது சாலப் படும். |
|
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும். |
1038. | ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் |
| நீரினும் நன்றதன் காப்பு. |
|
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது. |
1039. | செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் |
| தில்லாளின் ஊடி விடும். |
|
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும். |
1040. | இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் |
| நிலமென்னும் நல்லாள் நகும். |
|
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள். |