பக்கம் எண் :

திருக்குறள்211பொருள்

106. இரவு
 

1051.

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.
 

கொடுக்கக்கூடிய தகுதி  படைத்தவரிடத்திலே  ஒன்றைக் கேட்டு, அதை
அவர்     இருந்தும்     இல்லையென்று      சொன்னால்,     அப்படிச்
சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.
 

1052.

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.
 

வழங்குபவர்,  வாங்குபவர்   ஆகிய   இருவர்  மனத்திற்கும்  துன்பம்
எதுவுமின்றி   ஒருபொருள்    கிடைக்குமானால்,   அப்பொருள்   இரந்து
பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.
 

1053.

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்

றிரப்புமோர் ஏஎர் உடைத்து.
 

உள்ளதை  ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்
தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும்.
 

1054.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.
 

இருக்கும்போது     இல்லையென்று    கைவிரிப்பதைக்     கனவிலும்
நினைக்காதவரிடத்தில், இல்லாதார்   இரந்து  கேட்பது  பிறருக்கு   ஈவது
போன்ற பெருமையுடைய தாகும்.
 

1055.

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்

றிரப்பவர் மேற்கொள் வது.
 

உள்ளதை  இல்லையென்று  மறைக்காமல்  வழங்கிடும் பண்புடையோர்
உலகில்   இருப்பதால்தான்    இல்லாதவர்கள்,   அவர்களிடம்   சென்று
இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.