108. கயமை |
1071. | மக்களே போல்வர் கயவர் அவரன்ன |
| ஒப்பாரி யாங்கண்ட தில். |
|
குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். |
1072. | நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் |
| நெஞ்சத் தவலம் இலர். |
|
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! |
1073. | தேவ ரனையர் கயவர் அவருந்தாம் |
| மேவன செய்தொழுக லான். |
|
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம். |
1074. | அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் |
| மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். |
|
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள். |
1075. | அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் |
| அவாவுண்டேல் உண்டாம் சிறிது. |
|
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள். |