1076. | அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட |
| மறைபிறர்க் குய்த்துரைக்க லான். |
|
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம். |
1077. | ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் |
| கூன்கையர் அல்லா தவர்க்கு. |
|
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள். |
1078. | சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் |
| கொல்லப் பயன்படும் கீழ். |
|
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும். |
1079. | உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் |
| வடுக்காண வற்றாகும் கீழ். |
|
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பொறாமைப் படுகிற கயவன், அவர்மீது வேண்டு மென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான். |
1080. | எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் |
| விற்றற் குரியர் விரைந்து. |
|
ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும். |