பக்கம் எண் :

பாயிரம்2கலைஞர் உரை

6.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

 

மெய்,    வாய்,   கண்,   மூக்கு,  செவி  எனும்   ஐம்பொறிகளையும்
கட்டுப்படுத்திய    தூயவனின்   உண்மையான  ஒழுக்கமுடைய நெறியைப்
பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
 

7.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

 

ஒப்பாரும்   மிக்காருமில்லாதவனுடைய  அடியொற்றி  நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
 

8.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

 

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே
விளங்கும்    அந்தச்   சான்றோரின்   அடியொற்றி  நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்  கடப்பது  என்பது   எளிதான
காரியமல்ல.
 

9.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

 

உடல்,   கண்,  காது,  மூக்கு,  வாய்  எனும்  ஐம்பொறிகள் இருந்தும்,
அவைகள்  இயங்காவிட்டால்  என்ன  நிலையோ அதே நிலைதான் ஈடற்ற
ஆற்றலும் பண்பும்  கொண்டவனை  வணங்கி  நடக்காதவனின்  நிலையும்
ஆகும்.
 

10.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

 

வாழ்க்கை   எனும்   பெருங்கடலை   நீந்திக்   கடக்க  முனைவோர்,
தலையானவனாக   இருப்பவனின்   அடி  தொடர்ந்து செல்லாவிடில் நீந்த
முடியாமல் தவிக்க நேரிடும்.