1086. | கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் |
| செய்யல மன்னிவள் கண். |
|
புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா. |
1087. | கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் |
| படாஅ முலைமேல் துகில். |
|
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது. |
1088. | ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் |
| நண்ணாரும் உட்குமென் பீடு. |
|
களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை, இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே! |
1089. | பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் |
| கணியெவனோ ஏதில தந்து. |
|
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக? |
1090. | உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல் |
| கண்டார் மகிழ்செய்தல் இன்று. |
|
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால் கண்டாலே மயக்கம் தருவது காதல்தான். |