பக்கம் எண் :

களவியல்220கலைஞர் உரை

1096.

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.
 

காதலை மறைத்துக்  கொண்டு, புறத்தில்  அயலார்  போலக் கடுமொழி
கூறினாலும்,   அவள்  அகத்தில்  கோபமின்றி   அன்பு  கொண்டிருப்பது
விரைவில் வெளிப்பட்டுவிடும்.
 

1097.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.
 

பகையுணர்வு  இல்லாத  கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற
கடுவிழியும்,  வெளியில்  அயலார்  போல  நடித்துக்கொண்டு உள்ளத்தால்
அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.
 

1098.

அசையியற் குண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.
 

நான்  பார்க்கும்  போது  என்  மீது  பரிவு  கொண்டவளாக மெல்லச்
சிரிப்பாள்;  அப்போது,  துவளுகின்ற  அந்தத்  துடியிடையாள்  ஒரு புதிய
பொலிவுடன் தோன்றுகிறாள்.
 

1099.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.
 

காதலர்களுக்கு  ஓர்   இயல்பு  உண்டு;  அதாவது,  அவர்கள்  பொது
இடத்தில்      ஒருவரையொருவர்     அந்நியரைப்     பார்ப்பதுபோலப்
பார்த்துக்கொள்வர்.
 

1100.

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.
 

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால்,
வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.