1106. | உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் |
| கமிழ்தின் இயன்றன தோள். |
|
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும். |
1107. | தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் |
| அம்மா அரிவை முயக்கு. |
|
தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது. |
1108. | வீழும் இருவர்க் கினிதே வளியிடை |
| போழப் படாஅ முயக்கு. |
|
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும். |
1109. | ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் |
| கூடியார் பெற்ற பயன். |
|
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப்புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும். |
1110. | அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் |
| செறிதோறும் சேயிழை மாட்டு. |
|
மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது. |