1136. | மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற |
| படலொல்லா பேதைக்கென் கண். |
|
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். |
1137. | கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் |
| பெண்ணிற் பெருந்தக்க தில். |
|
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும் கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை. |
1138. | நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் |
| மறையிறந்து மன்று படும். |
|
பாவம் இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர் என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல். |
1139. | அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் |
| மறுகின் மறுகும் மருண்டு. |
|
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்! |
1140. | யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் |
| யாம்பட்ட தாம்படா ஆறு. |
|
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள். |