1156. | பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் |
| நல்குவர் என்னும் நசை. |
|
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண். |
1157. | துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை |
| இறைஇறவா நின்ற வளை. |
|
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே! |
1158. | இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும் |
| இன்னா தினியார்ப் பிரிவு. |
|
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது. |
1159. | தொடிற்சுடின் அல்லது காமநோய் போல |
| விடிற்சுடல் ஆற்றுமோ தீ. |
|
ஒருவரை யொருவர் காணாமல் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே! |
1160. | அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் |
| பின்இருந்து வாழ்வார் பலர். |
|
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்? |