117. படர்மெலிந் திரங்கல் |
1161. | மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க் |
| கூற்றுநீர் போல மிகும். |
|
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும். |
1162. | கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் |
| குரைத்தலும் நாணுத் தரும். |
|
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை. |
1163. | காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென் |
| நோனா உடம்பின் அகத்து. |
|
பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது. |
1164. | காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் |
| ஏமப் புணைமன்னும் இல். |
|
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை. |
1165. | துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு |
| நட்பினுள் ஆற்று பவர். |
|
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ? |