பக்கம் எண் :

களவியல்236கலைஞர் உரை

1176.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

 

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான  கண்கள், என்னைப் போலவே
வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!
 

1177.

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண்.

 

அன்று,  இழைந்து  குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே!
இன்று  பிரிந்து  சென்றுள்ள  அவரை  நினைத்துத்  தூங்காமலும்,  துளிக்
கண்ணீரும் அற்றுப் போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.
 

1178.

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணா தமைவில கண்.

 

என்னை   அரவணைக்கும்    எண்ணமின்றிக்    காதலித்த   ஒருவர்
இருக்கின்றார்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!
 

1179.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.

 

இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும்
பிறகு   தூங்குவதில்லை.   இப்படியொரு   துன்பத்தை   அனுபவிப்பவை
காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.
 

1180.

மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து.

 

காதல்   வேதனையைப்   பறைசாற்றிக்    காட்டிக்   கொடுக்க   எம்
கண்களேயிருக்கும்போது;   யாம்    மறைப்பதை    அறிந்து   கொள்வது
ஊரார்க்குக் கடினமல்ல.