பக்கம் எண் :

திருக்குறள்237இன்பம்

119. பசப்புறு பருவரல்
 

1181.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு குரைக்கோ பிற.

 

என்னைப்   பிரிந்து   செல்வதற்கு    என்    காதலர்க்கு   ஒப்புதல்
அளித்துவிட்டேன்;  ஆனால், இப்போது பிரிவுத்  துன்பத்தால் என்னுடலில்
பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
 

1182.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.

 

பிரிவு   காரணமாகக்   காதலர்   உண்டாக்கினார்  எனும்  பெருமிதம்
பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!
 

1183.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.

 

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு
அவர் என் அழகையும், நாணத்தையும்  எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று
விட்டார்.
 

1184.

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

 

யான்   நினைப்பதும்,   உரைப்பதும்   அவரது    நேர்மைத்   திறன்
பற்றியதாகவே  இருக்கும்போது,  என்னை யறியாமலோ  வேறு வழியிலோ
இப்பசலை நிறம் வந்தது எப்படி?
 

1185.

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்

மேனி பசப்பூர் வது.

 

என்னைப்  பிரிந்து என் காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை;
அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.