பக்கம் எண் :

களவியல்238கலைஞர் உரை

1186.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

 

விளக்கின்  ஒளிகுறையும்  சமயம்  பார்த்துப் பரவிடும் இருளைப்போல,
இறுகத் தழுவிய  காதலன்பிடி,  சற்றுத்  தளரும்போது காதலியின் உடலில்
பசலைநிறம் படர்ந்து விடுகிறது.
 

1187.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

 

தழுவிக்  கிடந்தேன்;  சற்றுத்  தள்ளிப்  படுத்தேன்;  அவ்வளவு தான்;
என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
 

1188.

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்

துறந்தார் அவரென்பார் இல்.

 

இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துப் கூறுகிறார்களே
அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று
சொல்பவர் இல்லையே.
 

1189.

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.

 

பிரிந்து  சென்றிட  என்னை  ஒப்புக்  கொள்ளுமாறு  செய்த  காதலர்
நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!
 

1190.

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின்.

 

என்னைப் பிரிவுக்கு  உடன்படுமாறு  செய்த காதலரை அன்பில்லாதவர்
என்று  யாரும்  தூற்றமாட்டார்கள் எனில், பசலை  படர்ந்தவள் என நான்
பெயரெடுப்பது நல்லது தான்!