பக்கம் எண் :

திருக்குறள்239இன்பம்

120. தனிப்படர் மிகுதி
 

1191.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

 

தம்மால் விரும்பப்படும்  காதலர்,  தம்மை  விரும்புகிற பேறு பெற்றவர்
விதையில்லாத   பழத்தைப்   போன்ற  காதல்  வாழ்க்கையின்  பயனைப்
பெற்றவராவார்.
 

1192.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.

 

காதலர்கள்   ஒருவரையொருவர்  உரிய  நேரத்தில்  சந்தித்து  அன்பு
பொழிவது,    வாழ்வதற்குத்    தேவையான    பருவமழை    பொழிவது
போன்றதாகும்.
 

1193.

வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.

 

காதலன்பில்  கட்டுண்டு  பிரியாமல்   இணைந்திருப்பவர்களுக்குத்தான்
இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.
 

1194.

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின்.

 

விரும்பப்படாத   நிலை   ஏற்படின்,   அந்தக்   காதலர்  நட்புணர்வு
இல்லாதவராகவே கருதப்படுவார்.
 

1195.

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.

 

நான் விரும்பிக் காதல்  கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக்
காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன  இன்பம் கிடைக்கப்
போகிறது?