1196. | ஒருதலையான் இன்னாது காமங்காப் போல |
| இருதலை யானும் இனிது. |
|
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும். |
1197. | பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் |
| ஒருவர்கண் நின்றொழுகு வான். |
|
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்! |
1198. | வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து |
| வாழ்வாரின் வன்கணார் இல். |
|
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது. |
1199. | நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் |
| டிசையும் இனிய செவிக்கு. |
|
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும். |
1200. | உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் |
| செறாஅஅய் வாழிய நெஞ்சு. |
|
நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும். |