121. நினைந்தவர் புலம்பல் |
1201. | உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் |
| கள்ளினும் காமம் இனிது. |
|
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும். |
1202. | எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் |
| நினைப்ப வருவதொன் றில். |
|
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை. எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும். |
1203. | நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் |
| சினைப்பது போன்று கெடும். |
|
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ? |
1204. | யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் |
| தோஒ உளரே அவர். |
|
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா? |
1205. | தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் |
| எம்நெஞ்சத் தோவா வரல். |
|
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும். |