1206. | மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் |
| உற்றநாள் உள்ள உளேன். |
|
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன். வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்? |
1207. | மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் |
| உள்ளினும் உள்ளம் சுடும். |
|
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ? |
1208. | எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ |
| காதலர் செய்யும் சிறப்பு. |
|
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா? |
1209. | விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் |
| அளியின்மை ஆற்ற நினைந்து. |
|
"நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்" எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. |
1210. | விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் |
| படாஅதி வாழி மதி. |
|
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக. |