122. கனவுநிலை உரைத்தல் |
| 1211. | காதலர் தூதொடு வந்த கனவினுக் |
| கியாதுசெய் வேன்கொல் விருந்து. |
| |
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது? |
| 1212. | கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க் |
| குயலுண்மை சாற்றுவேன் மன். |
| |
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன். |
| 1213. | நனவினான் நல்கா தவரைக் கனவினால் |
| காண்டலின் உண்டென் உயிர். |
| |
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது. |
| 1214. | கனவினான் உண்டாகும் காமம் நனவினான் |
| நல்காரை நாடித் தரற்கு. |
| |
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது. |
| 1215. | நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் |
| கண்ட பொழுதே இனிது. |
| |
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது! |