பக்கம் எண் :

கற்பியல்244கலைஞர் உரை

1216.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்

காதலர் நீங்கிலர் மன்.

 

நனவு  மட்டும்  திடீரென   வந்து  கெடுக்காமல்   இருந்தால், கனவில்
சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
 

1217.

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்

என்னெம்மைப் பீழிப் பது.

 

நேரில்  வந்து  அன்பு  காட்டாத  கொடிய நெஞ்சமுடையவர், கனவில்
வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
 

1218.

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

 

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம்  தந்தவர்,
விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில்  தாவி அமர்ந்து
கொண்டார்.
 

1219.

நனவினான் நல்காரை நோவர் கனவினான்

காதலர்க் காணா தவர்.

 

கனவில்   காதலரைக்    காணாதவர்கள்தான்  அவர்    நேரில் வந்து
காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
 

1220.

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்

காணார்கொல் இவ்வூ ரவர்.

 

என்   காதலர்   என்னைப்  பிரிந்திருப்பதாக   அவரைக்     குற்றம்
சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற நமது காதலனைக்  கனவில்
காண்பது கிடையாதோ?