123. பொழுதுகண்டு இரங்கல் |
1221. | மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் |
| வேலைநீ வாழி பொழுது. |
|
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து! |
1222. | புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் |
| வன்கண்ண தோநின் துணை. |
|
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ? |
1223. | பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் |
| துன்பம் வளர வரும். |
|
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது. |
1224. | காதலர் இல்வழி மாலை கொலைக்களத் |
| தேதிலர் போல வரும். |
|
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் கனத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது. |
1225. | காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் |
| மாலைக்குச் செய்த பகை. |
|
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் "காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?" என்று புலம்புகிறது. |