பக்கம் எண் :

திருக்குறள்245இன்பம்

123. பொழுதுகண்டு இரங்கல்
 

1221.

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.

 

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும்   மகளிர்
உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
 

1222.

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை.

 

மயங்கும்     மாலைப்    பொழுதே!   நீயும்    எம்மைப்    போல்
துன்பப்படுகின்றாயே!  எம்  காதலர்  போல்  உன்  துணையும்   இரக்கம்
அற்றதோ?
 

1223.

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்

துன்பம் வளர வரும்.

 

பக்கத்தில்   என்   காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன்
வந்த   மாலைப்   பொழுது,  இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத்
துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.
 

1224.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்

தேதிலர் போல வரும்.

 

காதலர்   பிரிந்திருக்கும்போது   வருகிற  மாலைப் பொழுது கொலைக்
கனத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
 

1225.

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை.

 

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக   வருத்துகிறது.
அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் "காலை நேரத்துக்கு நான் செய்த
நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த  தீமைதான்   என்ன?" என்று
புலம்புகிறது.