பக்கம் எண் :

கற்பியல்246கலைஞர் உரை

1226.

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

 

மாலைக்காலம்    இப்படியெல்லாம்   இன்னல்   விளைவிக்கக் கூடியது
என்பதைக்   காதலர்   என்னை  விட்டுப் பிரியாமல் இருந்த போது நான்
அறிந்திருக்கவில்லை.
 

1227.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலருமிந் நோய்.

 

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து,
மாலையில் மலரும் ஒரு நோயாகும்.
 

1228.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.

 

காதலர்    பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை
அறிவிக்கும் தூதாக  வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை
என்னைக்   கொல்லும்   படைக்கருவியின்   ஓசைபோல் அல்லவா காதில்
ஒலிக்கிறது.
 

1229.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.

 

என்   அறிவை  மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித்
துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.
 

1230.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயுமென் மாயா உயிர்.

 

பொருள்    ஈட்டுவதற்குச்   சென்றுள்ள   காதலரை எண்ணி மாய்ந்து
போகாத என்னுயிர், மயக்கும்   இந்த   மாலைப்   பொழுதில்   மாய்ந்து
போகின்றது.