பக்கம் எண் :

கற்பியல்248கலைஞர் உரை

1236.

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியார் எனக்கூறல் நொந்து.

 

என் தோள்கள்  மெலிவதையும்,  வளையல்கள்  கழன்று விழுவதையும்
காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம்
நொந்து போகிறேன்.
 

1237.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.

 

நெஞ்சே!  இரக்கமற்று   என்னைப்   பிரிந்திருக்கும்  அவருக்கு வாடி
வதங்கும்   என்   தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய
மாட்டாயோ?
 

1238.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

 

இறுகத்    தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு
இடைவெளியையும்   பொறுத்துக்  கொள்ள  முடியாமல் காதலியின் நெற்றி,
பசலைநிறம் கொண்டுவிட்டது.
 

1239.

முயங்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

 

இறுகத்  தழுவியிருந்த  போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால்
அதையே ஒரு  பிரிவு  எனக் கருதி   காதலியின் அகன்று நீண்ட கண்கள்
பசலை நிறம் கொண்டன.
 

1240.

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.

 

பிரிவுத்  துயரால்  பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது
கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்து விட்டது.