பக்கம் எண் :

திருக்குறள்249இன்பம்

125. நெஞ்சொடுகிளத்தல்
 

1241.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கு மருந்து.

 

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட  ஏதாவது  ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?
 

1242.

காத லவரிலர் ஆகநீ நோவது

பேதமை வாழியென் நெஞ்சு.

 

அவர்   நமது   காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ
மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
 

1243.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல்.

 

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம்    இரக்கமில்லாத  போது,
நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால்
என்ன பயன்?
 

1244.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று.

 

நெஞ்சே!    நீ   காதலரிடம்    செல்லும்போது     கண்களையும்கூட
அழைத்துக்கொண்டு   போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று
என்னையே அவை தின்றுவிடுவது போல் இருக்கின்றன.
 

1245.

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்.

 

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத  அவர்,  நம்மை
வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட   காதலைக்   கை
விட்டு விட முடியுமா?