126. நிறையழிதல் |
1251. | காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் |
| நாணுத்தாழ் வீழ்த்த கதவு. |
|
காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மனஅடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது. |
1252. | காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை |
| யாமத்தும் ஆளும் தொழில். |
|
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது. |
1253. | மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் |
| தும்மல்போல் தோன்றி விடும். |
|
எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும். |
1254. | நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம் |
| மறையிறந்து மன்று படும். |
|
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே. |
1255. | செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் |
| உற்றார் அறிவதொன் றன்று. |
|
தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து செல்லாத மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை. |