1266. | வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன் |
| பைதல்நோய் எல்லாம் கெட. |
|
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன். |
1267. | புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் |
| கண்ணன்ன கேளிர் வரின். |
|
கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது. |
1268. | வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து |
| மாலை அயர்கம் விருந்து. |
|
தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான். |
1269. | ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் |
| வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. |
|
நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும். |
1270. | பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் |
| உள்ளம் உடைந்துக்கக் கால். |
|
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போய்விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?. |