129. புணர்ச்சி விதும்பல் |
1281. | உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் |
| கள்ளுக்கில் காமத்திற் குண்டு. |
|
மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால், காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம். |
1282. | தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் |
| காமம் நிறைய வரின். |
|
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும். |
1283. | பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் |
| காணா தமையல கண். |
|
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை. |
1284. | ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து |
| கூடற்கண் சென்றதென் னெஞ்சு. |
|
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு. |
1285. | எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் |
| பழிகாணேன் கண்ட இடத்து. |
|
கண்ணில் மை தீட்டித் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும், கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன். |