26. | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் |
| செயற்கரிய செய்கலா தார். |
|
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும். |
27. | சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் |
| வகைதெரிவான் கட்டே உலகு. |
|
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும். |
28. | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
| மறைமொழி காட்டி விடும். |
|
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். |
29. | குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி |
| கணமேயுங் காத்தல் அரிது. |
|
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. |
30. | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் |
| செந்தண்மை பூண்டொழுக லான். |
|
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். |