1286. | காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் |
| காணேன் தவறல் லவை. |
|
அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை. |
1287. | உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் |
| பொய்த்தல் அறிந்தென் புலந்து. |
|
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன? |
1288. | இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் |
| கள்ளற்றே கள்வநின் மார்பு. |
|
என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக் கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு. |
1289. | மலரினும் மெல்லிது காமம் சிலரதன் |
| செவ்வி தலைப்படு வார். |
|
காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள். |
1290. | கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் |
| என்னினும் தான்விதுப் புற்று. |
|
விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள். |