130. நெஞ்சொடு புலத்தல் |
1291. | அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே |
| நீயெமக் காகா தது. |
|
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும் போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்? |
1292. | உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் |
| செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. |
|
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே. |
1293. | கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ |
| பெட்டாங் கவர்பின் செலல். |
|
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ? |
1294. | இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே |
| துனிசெய்து துவ்வாய்காண் மற்று. |
|
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை. |
1295. | பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும் |
| அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. |
|
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும். |