1296. | தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் |
| தினிய இருந்ததென் நெஞ்சு. |
|
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது. |
1297. | நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் |
| மாணா மடநெஞ்சிற் பட்டு. |
|
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்து விட்டேன். |
1298. | எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் |
| உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. |
|
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும். |
1299. | துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய |
| நெஞ்சந் துணையல் வழி. |
|
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்? |
1300. | தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய |
| நெஞ்சம் தமரல் வழி. |
|
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும். |