131. புலவி |
1301. | புல்லா திராஅப் புலத்தை அவருறும் |
| அல்லல்நோய் காண்கம் சிறிது. |
|
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக. |
1302. | உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது |
| மிக்கற்றால் நீள விடல். |
|
ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும். |
1303. | அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் |
| புலந்தாரைப் புல்லா விடல். |
|
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும். |
1304. | ஊடி யவரை உணராமை வாடிய |
| வள்ளி முதலரிந் தற்று. |
|
ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும். |
1305. | நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை |
| பூவன்ன கண்ணார் அகத்து. |
|
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும். |