1306. | துனியும் புலவியும் இல்லாயின் காமம் |
| கனியும் கருக்காயும் அற்று. |
|
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும். |
1307. | ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது |
| நீடுவ தன்றுகொல் என்று. |
|
கூடி முயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு. |
1308. | நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் |
| காதலர் இல்லா வழி. |
|
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்? |
1309. | நீரும் நிழல தினிதே புலவியும் |
| வீழுநர் கண்ணே இனிது. |
|
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும். |
1310. | ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் |
| கூடுவேம் என்ப தவா. |
|
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம். |