பக்கம் எண் :

திருக்குறள்263இன்பம்

132. புலவி நுணுக்கம்
 

1311.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.

 

பெண்ணாக     இருப்போர்    எல்லோருமே, பொதுவாக  நினைத்துக்
கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன்  பரந்த  மார்பைப்  பாவை
நான் தழுவ மாட்டேன்.
 

1312.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

 

ஊடல்   கொண்டிருந்தபோது   அவர்   தும்மினார்; ஊடலை விடுத்து
அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து.
 

1313.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.

 

கிளையில்   மலர்ந்த     பூக்களைக்      கட்டி    நான்   அணிந்து
கொண்டிருந்தாலும்,        வேறொருத்திக்குக்        காட்டுவதற்காகவே
அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.
 

1314.

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

 

"யாரைக்    காட்டிலும்     உன்னிடம்    நான்   காதல் மிகுதியாகக்
கொண்டுள்ளேன்" என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி  தவறாக
எடுத்துக்கொண்டு  "யாரைக்காட்டிலும்  யாரைக்  காட்டிலும்"  எனக்கேட்டு
ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
 

1315.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.

 

"இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்"  என்று   நான்   சொன்னவுடன்
"அப்படியானால் மறு   பிறப்பு    என   ஒன்று   உண்டோ? அப்போது
நம்மிடையே    பிரிவு     ஏற்படுமெனக்   கூறுகிறாயா?" எனக் கேட்டுக்
கண்கலங்கினாள் காதலி.