1316. | உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் |
| புல்லாள் புலத்தக் கனள். |
|
"உன்னை நினைத்தேன்" என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்." "அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?" எனக்கேட்டு "ஏன் மறந்தீர்?" என்று அவள் ஊடல் கொண்டாள். |
1317. | வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் |
| யாருள்ளித் தும்மினீர் என்று. |
|
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்" என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள். |
1318. | தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் |
| எம்மை மறைத்திரோ என்று. |
|
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் "ஓ" உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?" எனக் கேட்டு அழுதாள். |
1319. | தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் |
| இந்நீரர் ஆகுதிர் என்று. |
|
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் "ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?" என்று சினந்தெழுவாள். |
1320. | நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் |
| யாருள்ளி நோக்கினீர் என்று. |
|
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள். |