பக்கம் எண் :

திருக்குறள்265இன்பம்

133. ஊடலுவகை
 

1321.

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கும் ஆறு.

 

எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே  தோன்றும்
ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
 

1322.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்.

 

காதலரிடையே  மலர்ந்துள்ள  நல்லன்பு  சற்று   வாடுவதற்கு, ஊடுதல்
காரணமாக     இருந்தாலும்    அதனால்    விளைகிற   சிறிய  துன்பம்
பெருமையுடையதேயாகும்.
 

1323.

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து.

 

நிலத்தோடு    நீர்    கலந்தது    போல    அன்புடன் கூடியிருக்கும்
காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய    உலகம்   வேறொன்று
இருக்க முடியுமா?
 

1324.

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.

 

இறுகத்  தழுவி  இணை   பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல்
அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக்   குலைக்கும்
படைக்கலனும் இருக்கிறது.
 

1325.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.

 

தவறே     செய்யாத    நிலையிலும்கூட,    தன்னுள்ளம்  கொள்ளை
கொண்டவளின்  ஊடலுக்கு    ஆளாகி  அவளது மெல்லிய தோள்களைப்
பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.