4.அறன் வலியுறுத்தல் |
31. | சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு |
| ஆக்கம் எவனோ உயிர்க்கு. |
|
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? |
32. | அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை |
| மறத்தலின் ஊங்கில்லை கேடு. |
|
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. |
33. | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
| செல்லும்வாய் எல்லாஞ் செயல். |
|
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். |
34. | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் |
| ஆகுல நீர பிற. |
|
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. |
35. | அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் |
| இழுக்கா இயன்ற தறம். |
|
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும். |